முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!


சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள்.

"நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.)

அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில் த‌லைமைய‌க‌த்தை கொண்டிருக்க‌வில்லை.

ஜேர்ம‌ன் அதிப‌ர் அன்கெலா மெர்க‌ல் கிழ‌க்கு ஜேர்ம‌னியை சேர்ந்த‌வ‌ர். ஆனால், அங்கே அவ‌ருக்கு ம‌திப்பில்லை. கிழ‌க்கு ஜேர்மனிய‌ருக்கு அவ‌ர் ஒரு துரோகி! பொருளாதார‌ப் பிர‌ச்சினைக‌ள், ச‌மூக‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கார‌ணமாக‌ தீவிர‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு அதிக‌ரிக்கின்ற‌து. இஸ்லாமிய‌ வெறுப்பை காட்டும் PEGIDA, அத‌னுட‌ன் சேர்ந்து வெளிநாட்ட‌வ‌ர் எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் AfD ஆகிய‌ தீவிர‌வ‌ல‌துசாரி க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு கிழ‌க்கு ஜேர்ம‌னியில் அதிக‌ம்.

"ஜேர்ம‌னியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை, பூர்வீக‌ ஜேர்ம‌னிய‌ரை விட‌ அதிக‌ம்" என்ப‌ன‌ போன்ற‌ த‌வ‌றான‌ ந‌ம்பிக்கைக‌ளும் காண‌ப் ப‌டுகின்ற‌ன‌. (முத‌லாளித்துவ‌த்தை புரிந்து கொள்ளாம‌ல், "வெளிநாட்ட‌வ‌ரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புக‌ள் கிடைக்கும்" என்று அப்பாவித்த‌ன‌மாக‌ ந‌ம்புகிறார்க‌ள்.) இத்த‌னைக்கும் கிழ‌க்கு ஜேர்மனியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை மிக‌ மிக‌க் குறைவு.

அத‌ற்காக‌ தீவிர‌ வ‌ல‌துசாரி ச‌க்திக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இன‌வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து த‌வ‌று. அங்கே முக்கியமான‌ பிர‌ச்சினை பொருளாதார‌ பின்ன‌டைவே த‌விர‌ இன‌வாத‌ம் அல்ல‌. அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்து த‌ங்க‌ள‌து குறைக‌ளை கேட்க‌ வைப்ப‌து தான், தீவிர‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு ஓட்டுப் போடும் ம‌க்க‌ளின் நோக்க‌மாக‌ உள்ள‌து. இருப்பினும், இந்த‌ வாய்ப்பை இன‌வாத‌க் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌.

தீவிர‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Die Linke க்கும் ஆத‌ர‌வு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. அது முன்னாள் கிழ‌க்கு ஜேர்மனியை ஆண்ட‌ க‌ம்யூனிச‌ SED க‌ட்சியின் தொட‌ர்ச்சியாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. ஜேர்ம‌ன் ஒன்றிணைவின் போது, கிழ‌க்கு ஜேர்ம‌னிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் பொருளாதார‌ மேம்பாட்டுக்காக‌ இருந்த‌து. அவை மேற்க‌த்திய‌ பாணி ஜ‌ன‌நாய‌கம் கோரி ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் அல்ல‌.

பிற்குறிப்பு: The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌து. நான் சில‌ இட‌ங்க‌ளில் விரிவான‌ விள‌க்க‌ம் கொடுத்திருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020